உள்ளூர் செய்திகள் (District)

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-10-28 08:02 GMT   |   Update On 2023-10-28 08:02 GMT
  • போக்குவரத்து பாதிப்பு
  • போலீசார் பேச்சு வார்த்தை அடுத்து கலைந்து சென்றனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த கூழ்கார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது சம்பந்தமாக பலமுறை அதிகாரி களிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாட்ட றம்பள்ளி டோல்கேட்டில் புதுப்பேட்டை திருப்பத்தூர் செல்லும் சாலையில் இன்று காலை காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News