உள்ளூர் செய்திகள்

ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைத்த காட்சி.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனம்

Published On 2022-09-02 10:04 GMT   |   Update On 2022-09-02 10:04 GMT
  • தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • ஏராளமானேர் கலந்துகொண்டனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி வட்டம் ஐங்காலபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், பொது சுகாதாரத்தின் சார்பில் ரத்த சோகை விழிப்புணர்வு வாக னத்தை ஜோலார்பேட்டை க.தேவராஜி தொகுதி எம்.எல்.ஏ. கொடியசைத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் பொது சுகாதாரம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பார்வையிட்டார். மாவட்ட சமூக நல அலு வர்ஸ்டெல்லா வரவேற்றார். தொடர்ந்து அதனை ஜோலார்பேட்டை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சக்திசுபாசினிதிட்டங்களை விளக்கினார்.

5 பள்ளி மாணவிகள், 5 கர்ப்பி ணிகளுக்கு ஊட்டச்சத்து கையேடு, துண்டு பிரசுரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்காக தேர்வு செய் யப்பட்டுள்ள நிலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி , க.தேவராஜி எம். எல்.ஏ. ஆகியோர் பார்வை யிட்டனர் .

மாவட்ட ஊராட் சிக்குழு தலைவர் என்.கே. ஆர்.சூரியகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் திருமாவளவன், நாட்ட றம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வெண்மதிமு னிசாமி, துணைத் தலைவர் தேவராஜ், தாசில்தார் பூங்கொடி, மாவட்ட இளைஞர் அணிதுணை அமைப்பாளர் சிங்காரவேலன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News