உள்ளூர் செய்திகள்

புதிய அங்கன்வாடி மையம்

Published On 2023-07-23 09:16 GMT   |   Update On 2023-07-23 09:16 GMT
  • எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
  • ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டது

வாணியம்பாடி:

வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்மேம்பாட்டு நிதியில் இருந்து உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சிதலைவர் பூசாராணி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற உறுப் பினர் கீதாஜெகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச் சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந் தில்குமார், குழைந்தைகள் வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) ஆர். செல்வி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News