உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

சலவைத் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2022-06-05 10:52 GMT   |   Update On 2022-06-05 10:52 GMT
  • குடிபோதையில் தகராறு
  • போலீசார் விசாரணை

திருப்பத்துார்:

திருப்பத்துார் துரைநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், (வயது 40) இவருக்கும் அவரது சகோதரி மகன் கார்த்திக் (வயது23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்த கார்த்திக் வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவரது வீட்டில் இருந்த அவரது உறவினர் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி அச்சுதன் (வயது47) எதற்காக மாமா வீட்டில் வந்து குடித்துவிட்டு தகராறு செய்கிறார் என கார்த்தியிடம் கேட்டுள்ளார்.

அதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அச்சுதனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அச்சுதனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வெங்கடேசனின் உறவினர் அச்சுதன் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் டவுா்ன் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Tags:    

Similar News