உள்ளூர் செய்திகள்

ஜூலை 11-ந் தேதி ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம்

Published On 2023-06-18 08:34 GMT   |   Update On 2023-06-18 08:34 GMT
  • காணொலி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு
  • திருப்பத்தூர் அஞ்சல் துறை அதிகாரி தகவல்

திருப்பத்தூர்:

அஞ்சல் துறையின் மண்டல பெறும் அளவிலான ஓய்வூதியர் குறை தீர்வுக்கூட்டம் ஜுலை மாதம் 11-ம் தேதி நடைபெறவுள்ளது என திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தெரிவித்து ள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

அஞ்சல் துறையில் ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை மாதம் 11-ம் தேதி காலை 11 மணியளவில் மேற்கு மண்டலத்தின் குறைதீர்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் ெரயில்வே தொலைபேசி துறை ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் தொடர்பாக திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட அளவில் நிவர்த்தி செய்ய முடியாத குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News