உள்ளூர் செய்திகள்
- வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடந்தது
- போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மோட் டார் வாகன ஆய்வாளர் வெங்கட ராகவன் முன் னிலை வகித்தார்.
சென்னை தனியார் மருத் துவமனை உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் 100 டிரைவர், கண் டக்டர்கள், பொதுமக்கள் பயன்பெற்றனர்.
அதன் பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் விளக்கி பேசினர்.