அலங்கார மீன் வளர்க்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- பெண்கள், ஆதி திராவிட பயனாளிகளுக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படும்
- திருப்பத்தூர் கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்க்க ஆர்வ முள்ள விவசாயிகள் மாநில அரசின் நிதி உதவியுடன் கூடிய பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புழக்கடையில் அல்லது கொல்லைப்புறத்தில் அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதற்காக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒரு அலகு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன் றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.3 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீத மானியமும், பெண்கள் மற்றும் ஆதி திராவிட பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பொது பிரிவு பயனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புபவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை adfifvellorel@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித் துள்ளார்.