உள்ளூர் செய்திகள்

போலி டாக்டர் கைது

Published On 2023-08-01 10:00 GMT   |   Update On 2023-08-01 10:00 GMT
  • போலீசார் திடீர் சோதனை
  • மருந்து, மாத்திரைகளை பறிமுதல்

வாணியம்பாடி:

வாணியம்பாடி தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர். தன்வீர் உள்ளிட்ட குழுவினர் மதனஞ்சேரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த குகன் (வயது 26) என்பவர் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News