உள்ளூர் செய்திகள்
- சோதனையில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் லோகேஷ் உமராபாத் போலீசாரிடம் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வெங்கட சமுத்திரம் கூட்டு ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
இமானுவேல் (60) என்பவர் மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை செய்தது தெரிந்தது. பின்னர் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.