உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டையில் கூட்டுறவு கடனுதவி வழங்கும் விழா

Published On 2023-08-27 14:24 IST   |   Update On 2023-08-27 14:25:00 IST
  • ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகள்
  • அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கூட்டுறவு சங்கங்களின் சார்பில் மாபெரும் கடன் மேளா ஜோலார்பேட்டை அருகே சாலை நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

ரூ.4 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஜோலார்பேட்டை தேவராஜி எம்.எல்.ஏ. திருப்பத்தூர் நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்தியா சதிஷ்குமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதிஷ் குமார் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News