உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி வியாபாரி சாவு

Published On 2022-07-08 11:15 GMT   |   Update On 2022-07-08 11:15 GMT
  • பைக்கில் சென்ற போது விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம் பள்ளி அடுத்த மேல் அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் அனுமந்தன் (வயது 55). மாட்டு வியாபாரி. இவர் நேற்று தனது பைக்கில் வீட்டிலிருந்து வெலக்கல் நத்தம் பகுதிக்கு சென்றார்.

அப்போது சுண்ணாம்பு குட்டை அருகே செல்லும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அனுமந்தன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாற்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிறப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவரது மகன் செந்தமிழன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News