உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Published On 2022-12-05 15:37 IST   |   Update On 2022-12-05 15:37:00 IST
  • டெங்கு பரவும் அபாயம் ஏற்படுவதாக புகார்
  • தூர்வார பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆம்பூர்:

ஆம்பூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடன டியாக சாக்கடை கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News