உள்ளூர் செய்திகள்

குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

Published On 2023-09-11 15:55 IST   |   Update On 2023-09-11 15:55:00 IST
  • பக்தர்களை அச்சுறுத்தியதால் நடவடிக்கை
  • காப்பு காட்டில் விடப்பட்டன

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த தட்டல் அருகே உள்ள பைரப்பள்ளி, துருகம் வனப்பகுதியில் ஊட்டல் தேவஸ்தானம் உள்ளது.

இங்கு சரஸ்வதி கோவில், நந்தி தேவர் கோவில், விநாயகர், நவகி ரகங்கள், சப்த கன்னியர், சீதாராமர், லட்சுமணர் கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்ற னர். வனப்பகுதியில் கோவில்கள் அமைந்துள்ள தால் இங்கு ஏராளமான குரங்குகள் நடமாடி வருகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் வைத்திருக்கும் தின்பண்டங்களையும் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், பழம் ஆகியவற்றையும் குரங்குகள் பறித்து செல்கின்றன.

மேலும் பக்தர்களை காயப்படுத்தியும் அச்சுறுத்தி யும் வந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர். பக்தர்களின் பாதுகாப்பை கோவில் நிர்வாகம் உறுதி செய்ய குரங்குகளை பிடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆம்பூர் வனத்து றையினர் உதவியுடன் கோவில் வளாகத்தில் சுற்றி வந்த குரங்குகளை பிடிக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே இரும்பு கூண்டுகள் வைக்க ப்பட்டன. இதன் மூலம் 45-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டுக்கு சிக்கின.

பிடிபட்ட குரங்குகள் பேரணாம்பட்டு பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் வி. கோட்டா சாலையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் கவுண்டன்யா வனவி லங்குகள் சரணாலய காப்பு க்காட்டில் விடப்பட்டன.

இதை அறிந்த பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.இருப்பினும் மீண்டும் குரங்குகள் வராமல் இருக்க கோவில் நிர்வாகம் தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News