உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் துர்நாற்றம்

Published On 2023-06-21 08:51 GMT   |   Update On 2023-06-21 08:51 GMT
  • நோயாளிகள் அவதி
  • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆம்பூர்:

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஏராளமான நாய்கள் மருத்துவமனையை சுற்றி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் பெண்கள் வார்டில் நாய்கள் மலம் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.

அசுத்தம் உள்ள பெண்கள் வார்டில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News