உள்ளூர் செய்திகள்

தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

Published On 2023-09-06 15:28 IST   |   Update On 2023-09-06 15:28:00 IST
  • முன் விரோதம் காரணமாக விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 28).கூலி தொழிலாளி. இவருக்கும் நடராஜபுரத்தை சேர்ந்த சரவணன் (50). ஆட்டோ டிரைவர். என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் சரவணனுக்கும், செந்தில் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒரு தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த சரவணன், செந்தில்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சரவணன் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது சம்பந்தமாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை நேற்று இரவு கைது செய்தனர்.

Tags:    

Similar News