உள்ளூர் செய்திகள்

வெளி மாநில மதுவிற்ற முதியவர் கைது

Published On 2023-07-15 14:58 IST   |   Update On 2023-07-15 14:58:00 IST
  • 50 பாட்டில்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியில் ரீசன்ட் (வயது 60). என்பவர் வெளிமாநில மதுவை விற்பதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது ரீசன்ட் வெளிமாநில மதுவை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து உமராபாத் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News