காதலனுக்கு செல்போனில் வீடியோ அனுப்பி தற்கொலை செய்து கொண்ட மாணவி
- குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே இளம் பெண் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் திருமால் இவரது மகள் சரண்யா (வயது 23) இவர் கிருஷ்ணகிரி கல்லூரியில் எம்ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11 ம் தேதி எலி பேஸ்ட் குடித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரண்யா கடந்த 3 வருடங்களாக புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அவர் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் பேசவில்லை இதனால் இருவருக்கும் மனகருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 11 ம் தேதி தான் குடியிருக்கும் வாடகை வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிலிருந்து எலி பேஸ்டை குளிர்பானத்தில் கலந்து குடித்து விட்டதாக சகோதரி கார்த்திகாவுக்கு செல் போனில் தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்நிலையில் கடந்த 23 ம் தேதி சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சகோதரி கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சரண்யா குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்து கொண்டு அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது காதலனுக்கு அனுப்பி உள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.