உள்ளூர் செய்திகள்
வீட்டிற்குள் நுழைந்த சாரை பாம்பு
- தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர்குப்பம் பகுதியில் வசிப்பவர் சித்தன். இவரது வீட்டிற்குள் சாரை பாம்பு ஒன்று நுழைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டில் இருந்த வர்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலை மையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் நுழைந்த 6 அடி நீள சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.