உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

Published On 2023-08-01 15:33 IST   |   Update On 2023-08-01 15:33:00 IST
  • மேய்ந்து கொண்டிருந்த போது தடுமாறி விழுந்தது
  • தீயணைப்பு துறையினருக்கு தகவல்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் இர்பான். நேற்று வீட்டின் அருகே 30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்று பகுதியில் இவரது பசுமாடு மேய்ந்து கொண்டிருந்த போது தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது.

உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித் துள்ளனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் சென்று கிணற்றில் இருந்து மாட்டை உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News