உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் விசாரணை நடத்திய காட்சி.

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு

Published On 2023-06-04 08:23 GMT   |   Update On 2023-06-04 08:23 GMT
  • அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி நடந்தது
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம் கொத்தூர் கிராமம் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் வீரமணி (வயது32) இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் வாணியம்பாடி அடுத்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுமிக்கும் கடந்த 31-ந் தேதி குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் வந்தது.

நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலு, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோ ர்களுடன் இணைந்து மணமகன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிறுமி திருமணம் நடந்தது.

இதனையடுத்து வருவாய் துறையினர் மணமகன் வீரமணி மற்றும் அவரது பெற்றோர்களை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News