உள்ளூர் செய்திகள்

கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்ற 4 பெண்கள் கைது

Published On 2023-06-13 10:18 GMT   |   Update On 2023-06-13 10:18 GMT
  • 30 பாக்கெட்டுகள் பறிமுதல்
  • சிறையில் அடைத்தனர்

வாணியம்பாடி:

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டவுன் போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மது பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த உஷா (வயது 30), ராதிகா (வயது 35) மற்றும் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த பிரேமா (வயது38), வளர்மதி (வயது 45), ஆகியோரை போலீசார் கைது செய்த அவர்களிடமிருந்து 30 கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும்

4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News