உள்ளூர் செய்திகள்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

Published On 2023-02-20 09:49 GMT   |   Update On 2023-02-20 09:49 GMT
  • ரோந்து பணியில் சிக்கியது
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து புதுப்பேட்டை பகுதிக்கு செல்லும் சாலையில் நேற்று திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக சென்ற 2 டிப்பர் லாரி மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அரசு அனுமதி இன்றியும் மற்றும் உரிய உரிமம் இல்லாமல் மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்். 

Tags:    

Similar News