உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட காட்சி.

திருச்செங்கோடு பகுதியில்ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2023-04-20 07:39 GMT   |   Update On 2023-04-20 07:39 GMT
  • ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ கேரி பைகள்‌, டீ கப்புகள்‌ மற்றும்‌ இதர பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ விற்பணை செய்யப்படுகிறதா?
  • ஆய்வின்‌ போது ரூ.10 ஆயிரம்‌ மதிப்பிலான பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டது.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பைகள், டீ கப்புகள் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள் விற்பணை செய்யப்படுகிறதா? என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன் மற்றும் நகராட்சி ஆணையர் கணேசன் ஆகியோர் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடாசலம்,

தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சந்தான கிருஷ்ணன், உதயன் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள் கொண்ட குழுவினர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இனி வரும் காலங்களில் நகர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டால் கடைகள் மூடி முத்திரையிடப்படு வதுடன் கடை உரிமையா ளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும் நகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News