உள்ளூர் செய்திகள்

விழாவில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திசையன்விளை ஜெயராஜேஷ் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

Published On 2023-02-16 09:16 GMT   |   Update On 2023-02-16 09:16 GMT
  • திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது.
  • விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் இடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

திசையன்விளை:

திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது. டாக்டர் ஜெகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ராஜேஷ்வரன், பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஜய் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி முதல்வர் ராஜேஷ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் இடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளில் பல்வேறு வகையான கலைநிகழ்சிகள் நடந்தது. மாணவி கேத்ரின் ரெஜினா நன்றி கூறினார்.

Tags:    

Similar News