உள்ளூர் செய்திகள்
- குடமுருட்டி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
- அதிலிருந்த ஆட்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட டிராக்டரை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
வலங்கைமான் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இனாம்கிளியூர் என்ற கிராமத்தில், குடமுருட்டி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பதிவு எண் இல்லாத ஒரு டிராக்டர் மணலுடன் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த ஆட்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட டிராக்டரை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.