உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி சாவு

Published On 2023-08-25 09:40 GMT   |   Update On 2023-08-25 09:40 GMT
  • உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்
  • போலீசார் விசாரணை

வெம்பாக்கம்:

வெம்பாக்கம் அடுத்த பகவந்தபுரத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 35).கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது விஜயன் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை குடும்பத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News