உள்ளூர் செய்திகள்

பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

Published On 2023-06-11 08:18 GMT   |   Update On 2023-06-11 08:18 GMT
  • வேகத்தடையில் பைக் ஏறி இறங்கிய போது விபத்து
  • போலீசார் விசாரணை

ஆரணி:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 69). இவரது மனைவி நீலாவதி (49).

இவர்கள் குடியாத்தத்தில் இருந்து ஆரணி நோக்கி இருசக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.

கொங்கராம்பட்டு கிராம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் வரும்போது வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது. அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கணவன் மனைவி இருவரும் தவறி கீழே விழுந்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த நீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நீலாவதி உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News