உள்ளூர் செய்திகள்

வனவிலங்கு, மனித மோதல் விழிப்புணர்வு முகாம்

Published On 2023-09-06 09:44 GMT   |   Update On 2023-09-06 09:44 GMT
  • வனத்துறை சார்பில் நடந்தது
  • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனவிலங்கு, மனித மோதல் தடுப்பது குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக வனச்சர அலுவலர் ரவிக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணதாசன், வனச்சரக அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News