உள்ளூர் செய்திகள்

குளத்தில் முதியவர் பிணமாக மீட்பு

Published On 2023-08-29 08:29 GMT   |   Update On 2023-08-29 08:29 GMT
  • கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்
  • போலீசார் விசாரணை

ஆரணி:

ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குட்பட்ட எத்திராஜ் நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 65). இவர் கடந்த ஒரு வருட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மனமுடைந்த சங்கர் அவருடைய மகள் கீதாவிடம் ரூ.1000 வாங்கிக் கொண்டு கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். 2 நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை பையூர் பாறைக்குளத்தில் இறந்த நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

உடனடியாக ஆரணி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News