உள்ளூர் செய்திகள்

கூட்டுறவுத்துறை சார்பில் கடன் வழங்கும் விழா

Published On 2023-10-01 14:07 IST   |   Update On 2023-10-01 14:07:00 IST
  • ரூ.11 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
  • 697 பேர் பயணடைந்தனர்

வேங்கிக்கால்:

புதுப்பாளையம் மற்றும் கலசபாக்கம் வட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ ஆகியோர் 161 புதிய உறுப்பினர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆயிரத்து 697 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 64 லட்சம் ரூபாய் கடன் உதவிகளை வழங்கினர்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜெயம் வரவேற்றார். பொது மேலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News