உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்

Published On 2023-09-08 09:32 GMT   |   Update On 2023-09-08 09:32 GMT
  • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
  • 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

ஆரணி:

ஆரணி டவுன் காமராஜர் சிலை அருகே தேசிய காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நடை பயணம் நகர தலைவர் பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் தவணி அண்ணாமலை பங்கேற்றார்.

மேலும் நடைபயணம் காமராஜர் சிலை தொடங்கி பழைய பஸ் நிலையம் மார்க்கெட் வீதி மண்டி தெரு வழியாக காந்தி சிலையில் முடிந்தன.

பின்னர் நடை பயன பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடை பயன சாதனைகள் எடுத்துரைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் நகர நிர்வாகிகள் உதயகுமார் பிள்ளையார் குருமூர்த்தி, சம்பந்தம், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News