உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய 3 மாட்டு வண்டி பறிமுதல்

Published On 2023-06-08 07:59 GMT   |   Update On 2023-06-08 07:59 GMT
  • ரோந்து பணியில் சிக்கியது
  • போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர்

ஆரணி:

ஆரணி அடுத்த நேசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (வயது 30) மாட்டுவண்டியில் மணலை அள்ளிக்கொண்டு எஸ்.வி நகரம் அருகே வந்தபோது. ஆரணி தாலுகா போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன்அஜித் மாட்டுவண்டியை விட்டுவிட்டு தப்பிஓடினார்.

இதேபோன்று மேலசீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமு மற்றும் பூபதி ஆகிய இருவரும் 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தனர். அவர்களும் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் 3 வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாைரக் கண்டவுடன் தப்பி ஓடினர். தப்பி ஓடிய 3 பேரையும் ஆரணி தாலுகா சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News