உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தி.மு.க. அரசை கண்டித்து அக்ரி.கிருஷ்ண மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
லஞ்ச வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பினர். வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் முன்னிலை வகித்து பேசினார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.