உள்ளூர் செய்திகள்

நாளை 23-வது கோடை விழா மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது

Published On 2023-07-17 09:48 GMT   |   Update On 2023-07-17 09:48 GMT
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார்
  • தி.மு.க.வினர் ஏற்பாடு

கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் நாளை 23-வது கோடை விழா மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து கீழ்பென்னாத்தூரில் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ. எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

இதில் ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் குப்புசாமி, தேவேந்திரன், அவைத்தலைவர் ரவி, தி.மு.க. நிர்வாகிகள் பரசுராமன், செல்வமணி இளைஞரணி சதீஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியிலும் தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் அன்பு தலைமையில் நடந்தது.

Tags:    

Similar News