உள்ளூர் செய்திகள்
மான்களை வேட்டையாடிய 4 பேர் கைது
- 20 கிலோ இறைச்சி, துப்பாக்கி பறிமுதல்
- சாத்தனூர் காப்பு காட்டில் துணிகரம்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள பெண்ணையாறு காப்புக்காட்டில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் வனவர் ராதா, வனக்காப்பாளர்கள் சிலம்பரசன், கார்த்திகேயன், ராஜ்குமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காப்புக் காட்டில் உரிமம் இல்லாத கள்ள நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடி கூறு போட்டு கொண்டிருந்த 4 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரனையில் அவர்கள் தண்டராம்பட்டை சேர்ந்த சேகர்,
புளியம்பட்டியை சேர்ந்த வரதன், சங்கர்,
ஏழுமலை என்பதும் தெரியவந்தது.
அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ மான் கறி, வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.