உள்ளூர் செய்திகள்

சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2022-10-09 15:35 IST   |   Update On 2022-10-09 15:35:00 IST
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஊட்டி,

பெருமாளுக்கு புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை உகந்த நாளாகும். இந்த தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் சிலர் சாத்விக உணவுகளை மட்டுமே உண்பார்கள்.

இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போட்டு வணங்குவர். கோவில்களில் கோவிந்தா கோஷமிட்டு வழிபடுவார்கள். ஒரு சிலர் திருப்பதிக்கு இந்த புரட்டாசி மாதத்தில் சென்று வருவதும் உண்டு.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் 3-வது சனிக்கிழமையான நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பெண்கள் வீடுகளில் கோலமிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். வரும் வாரம் சனிக்கிழமை கருட சேவை உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News