உள்ளூர் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
- திரவுபதி அம்மன் கோவிலில் சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கொண்டல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் அம்பாள் திருக்கல்யாணம், சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தீமிதி உற்சவம் நடைபெற்றது.
விழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.
அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது ஏராளமான பக்தர்கள் சாட்டையடி பெற்று சென்றனர்.