உள்ளூர் செய்திகள்

தேர்பவனி நடைபெற்றதையும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூய அலங்கார மாதா ஆலயத்தில் தேர்பவனி விழா

Published On 2023-06-01 10:14 GMT   |   Update On 2023-06-01 10:14 GMT
  • பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
  • முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கையுடன் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வடக்குவாசல் கல்லுக்கட்டித் தெருவில் அமைந்துள்ள தூய அலங்கார மாதா ஆலயத்தில் தேர்பவனி விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு வடக்குவாசல் தூய அருளானந்தர் ஆலய பங்கு தந்தை அருள் தலைமையிலும் இணை பங்கு தந்தை ஜோ கிளமென்ட் முன்னிலையிலும் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு கூட்டு திருப்பலி நடைபெற்றன.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் தூய அலங்கார மாதா ஆடம்பர தேரில் எழுந்தருளி தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கையுடன் நடைபெற்றது.

தேர் பவனியின் போது, பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News