உள்ளூர் செய்திகள்

தேனியில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு கூட்டம் அதன் தலைவர் கோவிசெழியன் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு

Published On 2023-09-01 11:54 IST   |   Update On 2023-09-01 11:54:00 IST
  • தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு கூட்டம் தலைவர் கோவிசெழியன் தலைமையில் நடைபெற்றது.
  • ஆய்வுகூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது மேல்நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேனி:

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு கூட்டம் தலைவர் கோவிசெழியன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏக்கள் அய்யப்பன், கார்த்திகேயன், பாபு, பொன்னுச்சாமி, முத்துராஜா, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் சரவணக்குமார், மகாராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குழுவின் தலைவர் பேசியதாவது,

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பதில் அளிக்கும்போது மனுக்களு க்கான பதில்களை சட்டமன்ற பேரவை செய்தியாளர்கள் பதிவு செய்வார்கள். கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகள் அடிப்படையில் அறிக்கை யாக தயார் செய்யப்பட்டு பேரவையின் முன் தாக்கல் செய்யப்படும்.

தேனி மாவட்டத்தில் கடந்த 27.7.2010-ம் தேதியன்று குழு ஆய்வு மேற்கொண்டு 2011-ம் ஆண்டு 14-வது பேரவையில் மனுக்கள் குழுவினரால் பேரவைக்கு அளிக்கப்பட்ட 15 மனுக்கள் மற்றும் 2013-ம் ஆண்டு அளிக்கப்பட்ட 12 மனுக்கள் என மொத்தம் 25 மனுக்கள் மீது மறுஆய்வு மேற்கொள்ள குழு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆய்வுகூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது மேல்நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரீத்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News