உள்ளூர் செய்திகள்

கோவில் உண்டியல் திருட்டு

Published On 2023-10-28 15:01 IST   |   Update On 2023-10-28 15:01:00 IST
  • கோவில் உண்டியலை திருடப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருவோணம்:

ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணத்தங்குடி மேலையூர் கிராமத்தில் காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி காலை பூஜை செய்து சாமி கும்பிட்டு விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார் .பிறகு வந்து பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு உண்டியலை யாரோ மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து உண்டியலை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்.

Tags:    

Similar News