உள்ளூர் செய்திகள்

சரக்கு வாகன கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

வடமதுரை அருகே சரக்கு வேன் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

Published On 2023-02-24 06:49 GMT   |   Update On 2023-02-24 06:49 GMT
  • டிரைவர் தூக்கம் வந்ததால் வாகனத்தை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கினார்.
  • மர்மநபர்கள் சரக்கு வேன், கண்ணாடியை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்தை திருடிச்சென்றனர்.

வடமதுரை:

பாண்டிச்சேரி வாதனூர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன்(45). புளி வியாபாரி. இவர் அய்யலூர், வடமதுரை பகுதியில் புளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஊர் திரும்பி கொண்டிருந்த போது தூக்கம் வந்ததால் வாகனத்ைத திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கினார்.

அசதியின் காரணமாக ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சரக்கு வேன், கண்ணாடியை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற னர். இன்று காலை கண்விழித்து பார்த்தபோது கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம்பக்கம் விசாரி த்தும் எந்த பயனும் இல்லை. இதுகுறித்து வடமதுரை போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவை கொண்டு பணம் திருடிச்சென்ற மர்ம நப ர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News