உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளியில் பொருட்கள் திருட்டு

Published On 2023-06-26 09:54 GMT   |   Update On 2023-06-26 09:54 GMT
  • லேப்டாப், கம்ப்யூட்டர், யூ.பி.எஸ் உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சியில் இருந்து மதுக்கூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளி உள்ளது.

நேற்று முன்தினம் பள்ளியை மூடி விட்டு சென்றவர், நேற்று வந்து பார்த்த பொழுது, பள்ளியின் அலுவலக கதவு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த லேப்டாப், கம்ப்யூட்டர், யூ.பி.எஸ் உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து தனியார் பள்ளி உரிமையாளர் சுரேந்தர் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News