உள்ளூர் செய்திகள்

ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2023-01-05 15:33 IST   |   Update On 2023-01-05 15:33:00 IST
  • நேற்று இவர் ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தார்.
  • இதில் மூச்சு திணறி ராஜப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே கவுதாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா (வயது46). இவர் மீன்பிடிக்கும் தொழிலாளி. நேற்று இவர் ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரிக்குள் அவர் தவறி விழுந்தார். இதில் மூச்சு திணறி ராஜப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News