உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த வீடு.

அரசு ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு

Published On 2023-10-21 09:02 GMT   |   Update On 2023-10-21 09:02 GMT
  • கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றனர்.
  • 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே உள்ள மேலசெங்கமேடு அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி.

இவர் நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி விஜயலட்சுமி சீர்காழி கருவூலத்தில் பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றனர்.

இதனை கண்காணித்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளை யடித்துச் சென்றனர்.

இந்நிலையில் பணி முடித்து வீடு திரும்பிய முத்துக்குமாரசாமி வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News