உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி நகரில் தெருவில் சுற்றித் திரிந்த பன்றிகளை பிடிக்கும் பணி

Published On 2023-05-25 09:10 GMT   |   Update On 2023-05-25 09:10 GMT
  • பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பெருமளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது.
  • இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கடலூர்:

பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பெருமளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர்,மகேஸ்வரி ஆகியோரிடம் ஈகார் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து பண்ருட்டி நகராட்சி சார்பாக இன்று காலை முதல் தெருகளில் சுற்றி திரிந்த 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிருடன் பிடித்து அருகிலிருந்த வனத்துறைக்கு சொந்தமான சமூக காட்டில் விட்டனர் இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News