உள்ளூர் செய்திகள்

சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டு அணி வீரர்கள்.

அனைத்திந்திய போல்ரிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டு அணி சர்வதேச போட்டிக்கு தகுதி

Published On 2023-02-03 10:02 GMT   |   Update On 2023-02-03 10:02 GMT
  • ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 4 அணிகளும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
  • வீரர், வீராங்கனைகளை தமிழக போல்ரிங் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

தஞ்சாவூர்:

தேசிய அளவிலான 9-வது போல்ரிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் சர்தூல்கர் மாநிலத்தில் நடைபெற்ற நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் உள்பட 14 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் மினி சப் -ஜூனியர், சப்- ஜூனியர், ஜுனியர்,சீனியர், சூப்பர் சீனியர் என 4 பிரிவுகளின் அடிப்படையில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன.

இந்த போட்டியில் தமிழ்நாட்டி னைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 9 வீரர், வீராங்கனைகள் என தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆண்கள்பிரிவில் 36 வீரர்களும், பெண்கள் பிரிவில் 36 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் அனைத்து பிரிவிலும் சிறப்பாக பங்கேற்று விளையாடினர். இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 4 அணிகளும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் பங்கேற்ற அணிகளில் 4-ல் 3 பிரிவினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

இந்த வீரர் , வீராங்கனைகள் தமிழ்நாடு போல்ரிங் கழகத்தின் செயலாளரும், தென்னந்திய போல் ரிங் கழகத்தின் செயலாளருமான செந்தில்நாதன் (காஞ்சீபுரம்), தலைவர் புவேனஸ்வரி (தஞ்சை), தலைமை பயிற்சியாளர் சுந்தரமூர்த்தி (சென்னை) ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு பங்கேற்றனர்.

மேலும் சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை, தமிழக போல் ரிங் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

தமிழக அணி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மார்ச் மாதம் நடைபெற உள்ள, சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் மார்ச் மாதம் நடைபெறக்கூடிய சர்வதேச போட்டி தமிழகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News