உள்ளூர் செய்திகள்
- வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
- அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மொட்றகை பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கடந்த 2-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.