உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-05-08 09:38 GMT   |   Update On 2023-05-08 09:38 GMT
  • ரூ.721 ஊதியம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்
  • இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அரசு அறிவித்த ஊதியம் வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்யகோரியும் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அரசாங்கம் கூறிய ரூ.721 ஊதியம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதனையடுத்து 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ரூ.721 வழங்க அறிவுறுத்தியதையடுத்து போராட்டங்களை கைவிட்டனர்.

ஆனால் மாவட்ட கலெக்டர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. எனவே ஊதியத்தை தங்கள் நிறுவனம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், இன்று கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News