உள்ளூர் செய்திகள்

பஸ்சுக்குள் குடைபிடித்து பயணித்த பொதுமக்கள்

Published On 2022-06-12 14:13 IST   |   Update On 2022-06-12 14:13:00 IST
  • மழை பெய்தபோது கொட்டிய தண்ணீர்
  • புதிய பஸ்களை இயக்க வலியுறுத்தல்

 ஊட்டி:

நீலகிரிமாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், பல பஸ்கள் பழுதாகியும், சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தாளூரில் இருந்து கூடலூர் சென்ற அரசு பஸ்சில் சென்ற பயணிகள் பஸ்சுக்குள் குடை பிடித்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. பஸ்சின் மேற்கூரையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் குடை வைத்திருந்த சிலர் மழையில் நனையாமல் இருக்க பஸ்சக்டை பிடித்தவாறு அமர்ந்து பயணித்தனர்.

இதற்கு பஸ்சில் ஏறாமல் மழையில் நனைந்தபடி கட்டணமில்லாமல் வீடு போய் சேர்ந்து இருக்கலாம் என பெரும் அதிருப்தியை பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்று சேதம் அடைந்த பஸ்களை சீரமைக்க வேண்டும், அல்லது புதிய பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News