உள்ளூர் செய்திகள்
தாயிடமிருந்து நகை, பணத்தை பறித்து கவனிக்காத மகனை எச்சரித்த போலீசார்
- தாயிடமிருந்து நகை, பணத்தை பறித்து கவனிக்காத மகனை போலீசார் எச்சரித்தனர்.
- இதனை மூதாட்டி ஏற்றுக் கொண்டதால பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 75) .இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது 2 பவுன் நகை மற்றும் தனது கணவரது சேமிப்பு பணம் ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை தனது மூத்த மகன் அன்புவேல் வாங்கிக்கொண்டு தன்னை கவனித்துக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாக புகார் தெரிவித்தார். அதன் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் புகார்தாரரின் மகன் அன்புவேல் தனது அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய 2 பவுன் நகை , 1 லட்சம் பணம் மற்றும் வீட்டு மனை பத்திரம் ஆகியவற்றை தனது உறவினர்களை சாட்சியாக வைத்து அவர்கள் முன்னிலையில் கொடுத்து விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். இதனை மூதாட்டி ஏற்றுக் கொண்டதால பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.